Samstag, August 23, 2003

மகளிர் திரிசங்கு நிலை - மார்பகப் புற்றுநோய்

ஆக்கம்: டாக்டர்.சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: சி.ஆர்.ஜோசப்


மார்பகப்புற்றுநோயால் பீடிக்கப்பட்ட 50 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் எனது ஆதரவு கோரி என்னை அண்டினார். அவர் முன்பு எதுவித நோயாலும் பீடிக்கப்படாது சுகதேகியாக இருந்தார். அவருக்குப் புற்றுநோய் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் எமது சìத்தில் உள்ள எத்தனையோ பெண்கள் தங்களைக் கிரமமான மார்பகப் பரிசோதனைக்கு அல்லது மார்பகஆய்வுக்கு (Mammogram) உட்படுத்தாமை எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

மேலைத்தேசங்களில் உள்ள அநேகத் தமிழ்ப் பெண்கள் 50 வயதை எய்துகிறதினால் தங்களைத் தேசீகத் திரையிடல் நெறிக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள். இதனால் இவர்கள் 3 வருடங்களுக்கு ஒருமுறை மார்பக ஆய்வுப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். இது மார்ப்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து சிகிச்சை முறைகளைக் கைக்கொள்ள உதவும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கூச்சமடையாது இதில் ஈடுபட வேண்டும். சாதாரண வினாவிடைகள் கீழ்தரப்பட்டுள்ளன.

இது என்ன?
மார்புத்திசுக்களில் உண்டாகும் ஓர் அபாய வளர்ச்சியே மார்புப்புற்றுநோய்.

இது யாருக்கு உண்டாகிறது?
ஐக்கிய இராச்சியத்தில் 12ல் ஒருவர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். முதன்மையாக இது முதுபெண்களின் நோயாக இருந்தபோதிலும், இது எல்லா வயதினரையும் தாக்கக்கூடும். மார்ப்புப்புற்றுநோயால் தாக்கப்படுபவரில் 1% மானவர்கள் ஆண்கள். ஒரு குடும்பத்தில் ஒருவரோ அல்லது பலரோ இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் இது மற்றோருக்குப் பரவும் அபாயம் அதிகமாகும். பிள்ளைகள் இல்லாதிருந்தாலோ, முதற்பிள்ளை பிந்திப் பிறந்தாலோ, அல்லது முலைåட்டாதிருந்தாலோ இந்த நோய் உண்டாவதற்குச் சாதகமாயிருக்கும். சுரப்புகள் மாற்றுச் சிகிச்சை பெற்றாலும் சிலவருடங்களின் பின் இந்த நோய் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கும். புகைப்பிடித்தல், நீடியகாலம் மார்பகத்தில் கொப்பளங்கள் காணப்படுவதினாலும் இந்த நோய் உண்டாகலாம்.

அறிகுறிகள் என்ன?
அதிக பெண்களுக்கு மார்பகத்தில் கடினமான கல் போன்ற நோவில்லாத கட்டிகள் காணப்படலாம். மார்ப்புப்பகுதியில் தோல் பள்ளம் விழுந்து உள் இழுபடுவது போல் காணப்படலாம். முலைக்காம்பில் இரத்தக்கறையுடைய வெளியேற்றம் காணப்படுதலும் எச்சரிக்கை அறிகுறிகளாகும். மார்பகத்தில் நோவு, குறிப்பாக மாதவிடாயின் போது உண்டாவது கவலைகுரியதல்ல. பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பரிசீலித்து இவ்வித மாற்றங்கள் இருப்பின் பொது வைத்தியரின் (G.P) ஆலோசனை விரைவில் பெற வேண்டும்.

எனது வைத்தியர் என்ன செய்வார்?
அவர் உம்மை வினாவி உமது மார்பகங்களைப் பரிசோதிப்பார். அறிகுறிகள் தோன்றுமாயின் உம்மை மார்பாய்வு (Mammogram) என்னும் ஓ கதிரியக்கப் பரிசோதனைக்கு அல்லது வைத்தியசாலை மார்புச்சிகிச்சை நிபுணரிடம் அனுப்புவார்.

எவ்வித சிகிச்சை முறைக்கு நான் உட்படுத்தப்படுவேன்?
வைத்தியசாலை ஆலோசகர் உமக்கு புற்றுநோய் உண்டா என்று அறிய உமது மார்பகத்திசுவின் ஓர் மாதிரியயை எடுப்பார். இதைச் செய்வதற்கு உம்மை வெளிநோயாளியாகவோ அல்லது உடனுக்குடன் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தவோ கூடும். கட்டியை அல்லது மார்பகத்தின் ஒரு பகுதியை அகற்றுதல் மார்புப்புற்றுநோயின் சிகிச்சை முறையாகும். நோய் பரவியிருக்கிறதா,என அறிய அவர்கள் கமக்கட்டில் சில சுரப்பிகளையும் அகற்றலாம். அறவைசிகிச்சைக்கு முதல் மார்பு ஓ கதிர் பரிசோதனையும் இரத்தப் பரிசோதனையும் செய்வது வழக்கம். இவற்றின் ìலம் நோய் சுவாசப்பைக்களுக்கு அல்லது ஈரலுக்குப் பரவியுள்ளதா என்பதையும் அறியலாம்.

அறுவைச் சிகிச்சையின் பின் நீர் கதிரியக்க (Radio Therapy) முறைக்கு அனுப்பப்படுவீர். இது அதிக வலுவுள்ள X கதிராக மார்பகத்தில் செலுத்தப்படுதலால் அங்குள்ள மீதமான நோய்க்கலங்களை அகற்கிறது. உமக்கு Tamosxcifen எனும் வில்லைகளும் தரப்படலாம். சில மார்புப் புற்றுநோய் இனங்கள் Oestrogen சுரப்பைக்காவக் கூடிய உள்வாங்கிகளைக் கொண்டவையாகும். இந்த வில்லைகள் உள்வாங்கிகளை அடைத்து புற்றுநோய் கலங்கள் பிரிவதை தடுக்கின்றன. நோயின் வகையையும் பரவுதலையும் பொறுத்து சில பெண்களுக்கு Chemothreapy போன்ற வேறுவகை மருந்து வகைகளும் தேவைப்படும். மார்புப்புற்றுநோய் உடைய பெண்கள் ஆரம்ப சிகிச்சைமுதல் பலவருடங்களுக்கு கிரமமான இடைவெளியில் அவதானிக்கப்படுவார்கள்.

சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?
என்ன வயதினராய் இருந்தாலும் உமது மார்பகங்களை நீர் கிரமமாக சுய-பரிசோதனை செய்தல் இன்றியமையாததாகும். கட்டிகள் தோல் மாற்றங்கள் முலைக்காம்புக் கசிவு என்பன ஒர் வைத்தியரால் பரிசோதிக்கப்பட வேண்டியவையாகும். உமது குடும்பத்தில் மிக நெருங்கிய தாய் சகோதரி யாருக்காவது மார்புப் புற்று நோயின் அறிகுறிகள் கணப்பட்டால் அதை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும் நீர் பிள்ளைகள் உடைய இளம் பெண்ணாக இருந்தால் உமது பிள்ளைக்குத் தாய்பாலூட்ட தெண்டிக்க வேண்டும். ஆது பிள்ளைக்கு போசனையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதோடு உமக்கும் காப்பரணாக அமைந்து எதிர் காலத்தில் இவ்நோய் வராதிருக்க உதவும்.

நீர் 50 வயதை அடையும் போது தேசீக மார்பகத்திரையில் நெரியால் நடாத்தப்படும் மார்பக ஆய்வு பரிசோதனைக்கு 3வருடங்களுக் ஒரு முறை உம்மை உள்படுத்த வேண்டும். நீர் அழைக்கப்படாவிட்டால் அதை உமது பொது வைத்தியரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஆக்கம்: டாக்டர்.சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: சி.ஆர்.ஜோசப்
நன்றி:-வடலி சஞ்சிகை
ஓக்டோபர் 2001

Keine Kommentare: